தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சகஜ நிலை சற்று திரும்பியுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியையொட்டி அமைந்துள்ளதால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படியும் கனிமொழி கருணாநிதி எம்.பி அறிவுறுத்துதலின்படியும் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் அருகில் உள்ள மாப்பிள்ளையூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைநீர் வடிந்து வருகின்ற பகுதிகளை பார்வையிட்டு சில அறிவுரைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ் பாலன், உள்பட பலர் உடனிருந்தனர்.

