தூத்துக்குடி கடந்த 17ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக மாநகர் முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அழகேசபுரம் ராஜகோபால் நகர் பக்கிள்புரம் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இரண்டாம் கட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், சேலை, வேஷ்டி சாரம் ஆகியவற்றை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளிதரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழிற்சங்க அமைப்புச் செயலாளர் ராஜ், மாவட்ட செயலாளர் குமார முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம் செய்திருந்தார்.

