தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலர் குடியிருப்பின் மேல்பகுதியில் தங்கியுள்ளனர். சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேல அலங்காரத்தட்டு, அய்யர்விளை, வஉசி கல்லூரி வளாகத்திலும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட ராஜபாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் தேங்கி நின்ற வெள்ளநீரை வெளியேற்றும் பணியையும், முத்தையாபுரம் பகுதியில் வெள்ள மீட்பு பணிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அண்ணாநகர் 5வது தெரு பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்கள்.
கைத்தறிதுறை அமைச்சர் காந்;தி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வஉசி கல்வி குழுமத்தின் செயலாளர் சொக்கலிங்கம், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, கனகராஜ், முத்துவேல், அந்தோணி பிரகாஷ்மார்ஷல், வட்டசெயலாளர்கள் சிங்கராஜ், பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

