தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 ஆம் தேதி கன மழை பெய்தது. இதில் மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் உடைந்து தூத்துக்குடி நகர முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது
இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ராம்நகர், சோட்டையன் தோப்பு, தாளமுத்து நகர், மாதா நகர் உள்பட பகுதியில் வசிக்கும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினர்.
தூத்துக்குடி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, பொது செயலாளர் ஜெயசீலன், அமைப்பு செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தென் மாநில அமைப்பு செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்கள் துரை பாண்டியன், போத்திராஜ் செயலாளர்கள் விஜயராகவன், பாலமுத்து சபிதா சேகர் மற்றும் தென்மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

