தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க உணவு மற்றும் போர்வை, பாய், லுங்கி போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதிக்கப்பட்ட 4, 17, 44 ஆகிய வார்டு பகுதி பொதுமக்களுக்கு உணவு பொட்டலம், போர்வை, பாய், லுங்கி, துண்டு, பிஸ்கட், தண்ணீர்பாட்டில், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார். பின்னர், பாதிப்பு நீங்கும் வரை தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


முன்னாள் நகர்மன்ற தலைவர் பொறுப்பு மனோஜ்குமார், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ஜெயராணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வீரபாகு, முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், பகுதி செயலாளர் பொன்ராஜ், வட்ட செயலாளர் ராஜா, துரைசிங், அருண்குமார், அந்தோணி, அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

