தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலர் குடியிருப்பின் மேல்பகுதியில் தங்கியுள்ளனர். சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் முத்தையாபுரம் கிழக்கு, முஸ்ஸீம் தெரு, கேஎஸ்கே காம்பவுண்டு எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், தூத்துக்குடி போல்பேட்டை கிழக்கு மற்றும் கணேசநகர் பகுதியில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நின்ற வெள்ளநீரை வெளியேற்றும் பணியையும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் நவீன்குமார், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், வட்டசெயலாளர் கங்காராஜேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

