தூத்துக்குடி கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான மருத்துவக் கல்லூரி பின்புறம் உள்ள காமராஜ் நகர், பிரையன்ட் நகர் 4வது தெரு, மூன்றாவது தெரு மேற்கு, 1வது தெரு, அம்மன் கோவில் தெரு, முத்து கிருஷ்ணா நகர், அய்யன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு பகலாக நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். தற்பொழுது மாநகரின் பெரும்பலான பகுதிகளில் மழை நீர் வடிந்து மாநகரப் பகுதிகளில் சாலை போக்குவரத்து தொடங்கி உள்ளது மீதமுள்ள பகுதிகளிலும் விரைந்து மழை நீரானது அகற்றப்பட்டு வருகின்றது. மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர் ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

