நாசரேத்,டிச.10:
நாசரேத்தில் நல்ல சமாரியன் மனநலக் காப்பகத்திற்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாசரேத்தில் மனநலம் குன்றியவர்களுக்கும், தெரு ஓரங்களில் ஆதரவின்றி
திரிபவர்களுக்காகவும் நல்ல சமாரியன் மனநலக் காப்பகம் உதவிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த
மனநலக் காப்பகம்
வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்காப்பகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா சாத்தான்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர்
எஸ்.அருள் தலைமையில்
நடைபெற்றது.
தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் கே.பி.பிரமநாயகம், மூக்குப்பீறி ஊராட்சி மன்றதலைவர் கமலாகலையரசு ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
சிறப்பு
அழைப்பாளர்களாக மூக்குப்பீறி அரசு ஆரம்ப
சுகாதாரநிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்
வி.சோனியா, நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன், நாசரேத் காவல் துறை உதவி ஆய்வாளர் ராய்ட்சன் ஆகியோர் கலந் து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக திருமறையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார்.
ஜெயரேவதி வரவேற்று பேசினார்.
சாத்தான்குளம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள் புதியக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.நிறைவாக கிளாட்வின் ஜோசப் நன்றி கூறினார்.

