தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 6 மற்றும் 7வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பட்டி, சங்கு குளி காலனி, லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி உள்பட பலர் உடனிருந்தனர்.

