தூத்துக்குடி.
சட்ட மாமேதை அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது முழுஉருவ சிலைக்கு அசோகா அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தலைவர் கருப்பசாமி, செயலாளர் ஜெயவீரதேவன், பொருளாளர் உமாமகேஸ்வரி, துணை செயலாளர் வீரமணி, நிர்வாகிகள் பால்ராஜ், முருகேசன், பேச்சுராஜ், சோலையப்பன், ராஜசேகர், தருவைகுளம் கருப்பசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

