• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு – பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!!

policeseithitv by policeseithitv
December 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு – பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும் தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும்.

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் வாயிலாக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியான இன்றையதினம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதிபாஸ்நகரில் உள்ள 298 குடியிருப்புகளில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.26.20 இலட்சம் மதிப்பீட்டில் 233 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மீதமுள்ள 65 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.10.98 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக்கட்டிடப் பணிகளையும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.370.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 56 குடியிருப்புகளையும், கூடுதலாக ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 04 குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும், மேலும், 16 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 528 குடியிருப்புகள் கட்டும் பணிகளையும், கோமஸ்புரத்தில் ரூ.186.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மின்தகன மேடை கட்டுமானப் பணிகளையும், தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின்கீழ் ரூ.27.15 இலட்சம் கட்டப்பட்டுவரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், குழந்தைகள் நேய உட்கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ.27.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தினையும் கலெக்டர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்டப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் உரிய காலகட்டத்தில் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபுத்திரன், செயற்பொறியாளர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜாக்லின் அமலா, உதவிப் பொறியாளர்கள் ரவி, பிரான்சிஸ்கா, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்க மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மாவட்ட பிரதிநிதி சப்பானி முத்து, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், ஜோதிபாஸ் நகர் கிளைச் செயலாளர் வேல்ராஜ், மாரியப்பன் மற்றும் கௌதம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!! 

Next Post

அம்பேத்கர் 67வது நினைவு தினம்:  பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை!!!

Next Post
அம்பேத்கர் 67வது நினைவு தினம்:   பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை!!!

அம்பேத்கர் 67வது நினைவு தினம்:  பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் எஸ்.பி.மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In