தூத்துக்குடி
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் மக்கள் நலன் கருதி வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவத்துறை என பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் தமிழகம் வளர்ச்சியடைந்து முதன்மை மாநிலமாக உருவாகும் வகையில் உன்னதமான பணிகள் அனைத்து துறைகளிலும் நடைபெறுகின்றன.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்ட சிறப்பு முகாம் இரு தினங்கள் தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

இந்த சிறப்பு முகாமை தேவைப்படுவோர் குடும்ப அட்டை அசல், மற்றும் நகல், ஆதார்காடு அசல், மற்றும் நகல், ஆகிய விவரங்களுடன் சென்று மருத்துவ காப்பீடு அட்டையை பெற்று பயனடையவும் பழைய கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பவர்களும் புதுப்பித்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, உப்பள தொழிலாளர்கள், மீனவர்கள் பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத்திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து சங்க நிர்வாகம் மூலமும், பொதுநல அமைப்பு மூலமும் முறையாக தெரிவிக்கப்பட்டு, பொதுமக்களும் பங்கு கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. அதில் சர்க்கரை நோய், இரத்த பரிசோதனை, இரத்த அழுத்த சோதனை, போன்றவற்றிற்கு பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர் பொற்செல்வன், வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, தகவல் தொழில்நுட்ப அணி அருணாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், கண்ணன், விஜயகுமார், கந்தசாமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், வைதேகி, ஜெயசீலி, ஜான், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, சேகர், மூக்கையா, லியோ ஜான்சன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் சூர்யா, செல்வம், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் நவநீதன் மற்றும் அல்பட், மகேஸ்வரசிங் உள்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

