தூத்துக்குடி.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுதாகர் இல்லத்திருமண விழா தூத்துக்குடியில் வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவருமான ஆர்.சுதாகர்-ஷர்மிளா தம்பதியரின் மகள் சுஷாலு ரத்னா-விற்கும், ஆறுமுகநேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜவஹர் -தங்ககல்யாணி தம்பதியரின் மகன் டாக்டர் தினேஷ்பாபு-விற்கும் இரு வீட்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மஹால் கல்யாண மண்டபத்தில் வைத்து, சுப்பிரமணிய ஐயர், ரமேஷ் ஐயர் வேத மந்திரங்கள் ஓத மங்கல வாத்தியங்கள் முழங்க இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இத்திருமணவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தினார்.
வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கோவில்பட்டி எம்எல்ஏ-வுமான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பனங்காட்டு மக்கள் கழகம் நிறுவனர் சுபாஷ் பண்ணையார், ஒருங்கிணைப்பாளர் ஓடை செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மோகன், சின்னப்பன், மாநில அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாநில சிறுபாண்மை அணி துணைச் செயலாளர் சேவியர், ஒன்றிய செயலாளர்கள் ஜவஹர், காசிராஜன், விஜயகுமார், காந்தி என்ற காமாட்சி, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், இணைச் செயலாளர் சந்தனம், மாநில அமைப்புசாரா அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா, பிரபாகர், தனராஜ், விக்னேஷ், அருண் ஜெபக்குமார், ராஜேந்திரன், போடுசாமி, தகவல் தொழில்நுட்ப அணி பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் ஐயாதுரை பாண்டியன், பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், கவுன்சிலர்கள் விஜயலெட்சுமி, வெற்றிச்செல்வன், சந்திரபோஸ், பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்;டர் புவனேஸ்வரி, பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் டைகர் சிவா, வட்டச் செயலாளர்கள் உலகநாதபெருமாள், ஜெயக்குமார், மனுவேல்ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்லப்பா, சந்திரா, ஜெயக்குமார், டேவிட் ஏசுவடியான், ஒன்றிய கவுன்சிலர் கோபி, சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல்கள் கம்யூனிஸ்ட் கணபதி, சுப்பிரமணியம், அதிமுக வக்கீல்கள் சரவணபெருமாள், ரவீந்திரன் முனியசாமி, பிரபு, தொழிலதிபர்கள் ஹரி அன்கோ அண்ணாமலைசாமி, வேலவன் ஹைபர் மார்க்கெட் ஆனந்த், விமல்ராஜேஷ், பி.எஸ்.கே.மாரியப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், சமத்துவ மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் வில்சன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட மக்கள் வாழ்வாதார இயக்கம் தலைவர் தியாகராஜன், கூட்டுறவு கடன் சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், கௌரவ பொதுச் செயலாளர் சேசுராஜா, வணிகர்கள் சங்க பேரவை மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தாசில்தார் ஜான்சன், கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் சிவ முத்துக்குமாரசாமி, ஓ.பி.எஸ்.அணி மாவட்ட தலைவர் பழனிச்சாமி பாண்டியன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், டாக்டர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, ஆறுமுகநேரி அரசகுரு உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பொதுநல அமைப்பைச் சேர்ந்த பலர் திருமணவிழாவில் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார்களான ஆர்.சுதாகர், எஸ்.ஷர்மிளா, எஸ்.சுனேஷா ஆகியோர் செய்திருந்தனர்.

