தூத்துக்குடி அதிமுக ஓருங்கிணைப்பாளரும் பொருளாளரும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தங்கக் கட்டி ஜெகன் வரவேற்புரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட பகுதி செயலாளர் வட்ட செயலாளருடன் இணைந்து பூத் கமிட்டி அமைக்க மாவட்ட மாணவரணி முழு வீச்சில் செயல்படும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் தூத்துக்குடி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றி பெற செய்ய மாணவரணி சிறப்பாக செயல்படும், பழைய பேருந்து நிலையம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என்று செயல்பட்டு வருகிறது ஆனால் அனைத்து பேருந்து பலகை களிலும் வெறும் பழைய பேருந்து நிலையம் என்று தான் உள்ளது அதனை மாற்றி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என்று மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி நகரில் பிரபலமான பள்ளிகளான காரப்பேட்டை லசால் சேவியர்ஸ் போன்ற பள்ளி மாணவர்கள் காமராஜ் கல்லூரியில் இருந்து பள்ளி வரை சரியான பேருந்து வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர் பள்ளி குறிப்பிட்ட வேலையில் போதுமான பேருந்துகளை இயக்கி மாணவர்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும், முன்னாள் முதல்வர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த காமராஜரின்; பெயரை தூத்துக்குடியில் எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு சூட்டிட ஆவணம் செய்ய வேண்டும் என்று உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர்கள் பழனிச்சாமி பாண்டியன், பேச்சியம்மாள், மாணவரணி இணைச் செயலாளர் மகாராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மந்திரம், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சோலையப்பன், விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், ஓன்றிய செயலாளர் தாசன், தெற்கு பகுதி செயலாளர் லோகு கணேசன், பொதுக்குழு உறுப்பினர் தங்கப்பாண்டி, வட்ட செயலாளர்கள் கருப்பு, வேல்சாமி, மணிகண்டன், திருமால், முனியசாமி, சில்வர்ஸ்டன், மாவட்ட ஜெ பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் ஜெயராமன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்பால் பாஷா, ஜெ பேரவை இணைச் செயலாளர் முத்து பட்டன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சுதாகர், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற பொருளாளர் வேல்சாமி, மாவட்ட ஜெ பேரவை துணை செயலாளர் ராஜதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மாரியப்பன், சுப்பையா, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் முத்து முகமது, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன், ஊராட்சி செயலாளர் பாலன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ஆனந்த், மகளிர் அணி நிர்வாகிகள் சந்திரா, முல்லை அம்மாள், சரண்யா, முத்துலட்சுமி, பொருளாளர் கணேஷ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்கள் பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, நிர்வாகிகள் சண்முகராஜ் என்ற சுந்தர், பால்துரை, சந்தனகுமார், பாண்டி செல்வம், ரமேஷ் சபிக்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

