• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் – கனிமொழி எம்.பி. பேச்சு

policeseithitv by policeseithitv
November 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் – கனிமொழி எம்.பி. பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திமுக மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.

மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர்கள் விஜிலா சத்தியானந்த், தமிழரசு எம்எல்ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில மகளிர் பிரச்சாரக்குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, மாநில திமுக செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், எட்டையாபுரம் பேருராட்சி மன்ற தலைவருமான ராமலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.

விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், மாநில வலைதள துணைச் செயலாளர் ரியா, தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் பியூட்டி, தென்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நலச்சங்கத் தலைவர் பியர்சில், விளாத்திகுளம் அக்லூட் மாற்றுத்திறனாளிகள் பள்ளி தாளாளர் தினேஷ்கனகராஜ், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க செயலாளர் ஜெபராஜ், கண்பார்வையற்றோர் சங்கத்தை சார்ந்த முருகேசன், காதுகேளாதோர் நலச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு, கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் செய்த உதவிகளையும் எண்ணிப் பார்த்து நாங்கள் வாழ்கிறோம் என்று பேசினார்கள்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்பி-யுமான கனிமொழி பேசுகையில்: கலைஞர் செய்த பணிகளையும், நன்மைகளையும் இங்கு சுட்டிக்காட்டி பேசினார்கள். ஒரு அரசியல் கட்சித்தலைவர் இயக்கத்தை நடத்துபவர், மற்றவர்களின் வாக்குவங்கி எந்த அளவிற்கு நமக்கு கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு தான் திட்டங்களை அறிவித்து அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவார்கள். ஆனால் நம்முடைய கலைஞர் பார்வையில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கண்பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் என அவர்களை அடையாளம் கண்டு, திட்டங்களை அறிவித்து அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தி இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்கச் செய்தவர் கலைஞர். அதைபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று காப்பகம் அமைத்து, பாதுகாப்பு கொடுத்தார். அப்போது நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்;ச்சியில் கலைஞருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி காப்பாகம் அமைக்கவில்லை என்றால் நாங்கள் தெருவில் செத்துக் கிடந்திருப்போம் என்று தெரிவித்தார்கள். நான் உடனே கலைஞரிடம் தொடர்பு கொண்டு உங்களுக்கு நான் மகளாக பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தேன். மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் செல்லும் போது உதவியாளர் செல்வதற்கு அரசாணை, உதவித்தொகை, திருநங்கைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைத்திருந்தவர்களின் வாழ்விற்கு வழிவகை செய்து அங்கீகரித்தவர் கலைஞர். மற்றவர்களை போல் வெளிநாடுகளுக்கு அவர்களும் செல்லலாம் என்ற அளவிற்கு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை புரிந்தார். அதையெல்லாம் எண்ணிப் பார்த்து தான் இன்று அவரது வழியில் தடம் மாறாமல் தளபதியார் ஆட்சியிலும் பணிகள் நடைபெறுகின்றன. கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது மாற்றுத்திறனாளிகள் 12 கோரிக்கைகளை முன்வைத்து கலைஞரை சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் காத்திருந்து அவர்களை சந்தித்து, அன்றைய தினமே கோரிக்கைகளை பெற்று அரசு அதிகாரிகளை அழைத்து அரசாணை பிறப்பித்து அனைவரது வாழ்விலும் ஒளியேற்றினார். உங்களுக்கான இருக்கின்ற ஒருசில கோரிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் முழுமையாக நிறைவேற்றி தருவார். உங்களது எல்லா தடைகளும் நொறுங்கும். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். அதற்கு நீங்கள் எல்லோரும் அரசுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினர்கள் பேசும்போது, கொரோனா காலக்கட்டம் முதல் தற்போது வரை எல்லா உதவிகளையும் எங்களுக்கு செய்து கொடுத்தும், வைக்கின்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருகின்ற எம்.பி. கனிமொழிக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மகளிரணி அமைப்பாளர் சாரதா, மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் தயாநிதிபாண்டியன், மாவட்ட மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் நித்யா, மீனாட்சி, தூத்துக்குடி மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கவுன்சிலர் ஜெயசீலி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் கருணா, மணி, பிரபாகர், லிங்கராஜா, அல்பர்ட், நாமக்கல் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கௌரி மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி நன்றியுரையாற்றினார்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது

Next Post

மாநில உரிமை மீட்பு புல்லட் பேரணியை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார்.

Next Post
மாநில உரிமை மீட்பு புல்லட் பேரணியை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார்.

மாநில உரிமை மீட்பு புல்லட் பேரணியை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In