தூத்துக்குடி,
நவ,15
தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல்
அதிமுக மாநகர கிழக்கு பகுதி தலைவரும், மாநகர கிழக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும்,
46 வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளருமான, பிஜே. புல்டன் ஜெசின் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடினர்.
தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெரு வேலவன் ஹைபர் அருகில் அமைந்துள்ள குரூஸ் குரூஸ்பர்னாந்து
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய
பிஜே. புல்டன் ஜெசின் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள குரூஸ்பர்னாந்து
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்காவில் அமைந்துள்ள குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு
பிஜே. புல்டன் ஜெசின்
இனிப்புகள் வழங்கினர். தூத்துக்குடியில் எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் பரதர் சமுதாய மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அந்தக் கட்சிகள் வெற்றிவாகை சூட முடியும் என்ற நிலை உள்ளது. ஆகையால் திராவிட கட்சிகள் ஆனாலும் சரி, தேசிய கட்சிகள் ஆனாலும் சரி
தூத்துக்குடியில்
பரதர்
சமுதாயத்தைச் சார்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில்
அதிமுக தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என இரு மாவட்டங்கள் பிரித்து 2 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்
அதிமுக தலைமை தூத்துக்குடி மாநகர மாவட்டம்
செயலாளர் நியமிக்க ஆலோசனை செய்து வருவதாகவும்,
இந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு பரதர் சமுதாயத்தைச் சார்ந்த அதிமுக நிர்வாகி ஒருவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது
இந்நிலையில்
அதிமுக மாநகர கிழக்கு பகுதி தலைவரும், மாநகர கிழக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும்,
46 வது வார்டு அதிமுக வட்டக் கழக செயலாளருமான, பிஜே. புல்டன் ஜெசினுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும், அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் நற்பெயர் உள்ளதால் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் நியமித்தால்
பிஜே. புல்டன் ஜெசினுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில்,
குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி புல்டன் ஜெசின் தலைமையில் அதிமுக தொண்டர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்தத் தகவல் அதிமுக தலைமைக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வரை சென்றதாக கூறப்படுகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட இருப்பதாகவும் அது பரதர் சமுதாயம் சார்ந்த அதிமுக நிர்வாகிக்கு வழங்கப்படும் என பேசப்பட்டு வரும் நிலையில் புல்டன் ஜெசினு க்கு கொடுத்தால் அனைத்து தரப்பினரிடமும் அவருக்கு நற்பெயர் உள்ளதால் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அதிமுக எழுச்சியோடு காணப்படும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பதோடு தங்களது கோரிக்கையை எடப்பாடி யாருக்கு கோரிக்கையாக எடுத்துச் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

