செவ்வாய் 14, நவம்பர் 2023
தூத்துக்குடியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
விழாவிற்கு போஸ் அண்ணாச்சி பாலசரஸ்வதி தலைமை தாங்கினார். ஆசிரியை தேவி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சார்பதிவாளர் குருசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ், செயலாளர் காமாட்சி முருகன், துணை தலைவர் பத்மலதாராஜ், ஸ்ரீநலம் தரும் விநாயகர் ஆலய நிர்வாகிகள் தலைவர் நவநீதன், உபதலைவர்கள் சிங்ராஜ், கணேசன், துணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், பிரபாகர், துணைப் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அரிமா ஆசிரியர் தின தலைவர் சகாயராஜன், ஆசிரியர் முருகன் நல்லாசிரியர் சம்பத் சாமுவேல், கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக நடைபெற்ற குழந்தைகள் தின தனித்திறன் போட்டிகளான மாறுவேடம், வண்ணம் தீட்டுதல், கையெழுத்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

