தூத்துக்குடி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 3வது தெரு கிழக்குப் பகுதியில் உள்ள நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
உடன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் சுப்பையா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, சுகன்யா செந்தில்குமார், அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

