தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அசோக்நகர் இறகுபந்து விளையாட்டு கூடத்தில் எஎன்பிசி மற்றும் சிஎம்என் இறகுபந்து கிளப் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகள் வழங்கி பேசுகையில்
விளையாட்டு போட்டி தற்போதைய கால சூழ்நிலைக்கேற்ப மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இதுபோன்று நான்கு இடங்களில் பொதுமக்களின் நன்மை கருதி கட்டப்பட்டுள்ளது. மக்கள் நலன் தான் முக்கியம் என்று முதல்வர் வழியில் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. இதை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு எல்லா துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். என்று பணியாற்றும் முதலமைச்சரின் வழியில் விளையாட்டு துறையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரையின் படி பல்வேறு துறையை சார்ந்தவர்கள் விளையாட்டில் சாதனை படைக்கும் வகையில் ஊக்குவித்து வருகிறோம். இந்த மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்களும் உலக அளவில் பங்கெடுக்க வேண்டும். அதற்கேற்றாற் போல் உங்களது திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், தொழிலதிபர்கள் பிஎஸ்டிஎஸ் வேல்சங்கர், சுந்தரம், கண்ணன், சப்இன்ஸ்பெக்டர் சின்னராஜன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், சிஎம்என் இறகு பந்து கிளப் தலைவரும் கவுன்சிலருமான சந்திரபோஸ், செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் தேவானந்த், உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

