தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்றினை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கலெக்டர் லட்சுமிபதி, சண்முகையா எம்.எல்.ஏ, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் ஜான்சுபாஷ், ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, திமுக மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளையராஜா, தாசில்தார் பிரபாகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ், பகுதி செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஊராட்;சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை தீர்க்கும் வகையில் இந்த முகாம் இன்று முதல் 21 நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் அதிகளவில் மீன் குஞ்சுகள் உற்பத்திகாகவும் இங்கு இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

