தூத்துக்குடி
தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு சங்கத்தின் பொதுச்செயலாளரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி போல்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் 75 பேருக்கு தீபாவளி போனஸ் வழங்கி பேசுகையில் இந்த சங்கத்தில் எனது தந்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு முக்கியம் என்று பணியாற்றி ஓவ்வொரு ஆண்டும் கூலி உயர்வு சம்பந்தமாக உப்பள அதிபர்களிடம் சுமூகமாக பேசி பெற்றுக் கொடுத்து பணியாற்றி வந்தார்.
அவரது மறைவிற்கு பின்பு இந்த பொறுப்பேற்ற நான் தந்தை வழியிலேயே ஒவ்வொரு ஆண்டும் உங்களது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களும் உங்களுக்கு பெற்று உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எந்த பணியை செய்தாலும் அதை நல்ல முறையில் செய்து ஓற்றுமையாக தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். திமுக தலைவர் கலைஞருக்கு பின் அவரது வழியில் தளபதியார் கட்சியையும் தமிழக மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு பணியாற்றுவது போல் எனக்கும் திமுகவும் தொழிலாளர்கள் நலனும் இரு கண்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.


தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மற்றும் ஐசக், ரெங்கசாமி, தாத்தாசாமி, அசன், நல்லமுத்து, ஜேசுராஜா, திமுக மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

