தூத்துக்குடி,
அக், 30
தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர். தனபாலன் ஆணைக்கிணங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பெருந்திரளாக வருகை தந்து தூத்துக்குடி மூன்றாம் மைலில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முன்னதாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பனுக்கு தேவர் மகாசபைத் தலைவர் அருள்ராஜ், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் சுடலைமணி, நிறுவனத்தலைவர் பெருமாள் தேவர் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் மாலை, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வின்போது, பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், தருவைகுளம் சண்முகவேல், சிவத்தையாபுரம் சரவணன்,பட்டு ராஜா, தினேஷ், கார்த்திக், கணேஷ், பேப்பர் ஸ்டோர், கணேசன், டெய்லர் சரவணன், கதிரேசன், பெத்துவிஷ்ணு, கூட்டாம்புளி கார்த்திக், குமார், கதிர், அஸ்வின், புதுக்கோட்டை அருண், ஹரி, , பாலமுருகன், வெங்கடேஷ், உட்பட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள், ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள எஸ் பி மாரியப்பன் கட்சிப் பணியில் மும்மரமாக தூத்துக்குடியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தியை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாவட்டச் செயலாளர் எஸ். பி மாரியப்பன் தலைமையில் பெரும் திரளானோர் கலந்து கொண்டு தேவர் திருமகனாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


