தூத்துக்குடி.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.கே.பிரதீப் சகோதரரும், கஸ்பார்-பொன்னம்மாள் ஆகியோரது மகன் வெங்கடேஷ், முருகேசன்-ராமலெட்சுமி தம்பதியரின் மகள் புவனேஸ்வரி என்ற பிரியங்கா ஆகியோர் திருமணம் இருவீட்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சிதம்பர நகர் சக்திவிநாயகர் திருக்கோயிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் பாலசரஸ்வதி திருமண மஹாலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வருகை தந்த அனைவருக்கும் மணமகன் வீட்டார் சார்பில் வக்கீல் கவாஸ்கர், செல்வகாமாட்சி, பாரத், அமுதவானி, சீனிவாசன், சுமித்ரா, வெங்கடகோடி, வெங்கடதிருமாலா ஆகியோர் வரவேற்றனர்.
திருமண விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், விஜயலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் சங்கரலிங்கம், செல்வராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் முருகன், முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனசிங், தொழிலதிபர்கள் பிரேம் ஆதித்தன், ஜோ, வேலுமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்ட பிரதிநிதி துரை, வடதிசை இந்து நாடார் உறவின் முறை சங்க முன்னாள் துணை தலைவர் காமராஜ், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், தமிழ்செல்வன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பொதுநல அமைப்பை சார்ந்தவர்களும், ஆன்மீக அன்பர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.கே.பிரதீப், கீதா ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.

