தூத்துக்குடி மாநகரில் பிரதிபெற்ற பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தசரா உற்சவ விழாவையொட்டி கடந்த 13ம் தொடங்கிய தசரா விழாவில் தினமும் சிறப்பு பல்வேறு அம்மன் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பிரதான சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், காரியதரிசி முனியசாமி, ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, உள்பட கோவில் ஆலோசகர்கள் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, தர்மகர்த்தாவாக இருந்து பணியாற்றிய கோவில் என்பது குறிப்பிடதக்கது.

