தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் காந்தி ஜெயந்தி விழா, சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா தூத்துக்குடி திரேஸ்புரம் ஜங்ஷனில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம் பேசுகையில் மணிப்பூர் மாநிலத்தில் 5 மாதமாக நடைபெறும் தேவையற்ற சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அரியனாவிலும் நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மோடியின் ஆட்சியில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர். அனைவரும் சமமாக ஓற்றுமையாக வாழ வேண்டும். என்பது தான் இந்தியா கூட்டணியில் விருப்பம், அதை நிறைவேற்றும் வகையில் பல மாநில கட்சி தலைவர்கள் ஓருங்கிணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கும் அவரது உழைப்பும் அதிகம், தமிழகம் ஸ்டாலின் ஆட்சியில் அமைதி பூங்காவாக இருப்பதை போன்று இந்தியா கூட்டணி பெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் அமைதி பூங்காவாக இருக்கும், நடிகர் வடிவேலு ஓரு படத்தில் நானும் ரவுடி தான் என்று சொல்லிக்கொண்டு காவல்துறை வாகனத்தில் ஏறுவதை போல் இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்களில் ஊழல் செய்யாதவர் நான் தான் என்று மார்தட்டி கொள்கிறார் மோடி, ஆனால் அவர்கள் ஆளும் மாநிலத்திலேயே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இறந்தவர்கள் பெயரில் பெரிய மோசடி நடந்துள்ளது. 7.50 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளனர். அதற்கு எந்த பதிலையும் காணோம். 2024ல் பிஜேபி அரசுக்கு முடிவுரை எழுத வேண்டும். என்று பேசினார்.

மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி ஒன்றிய பாஜக அரசின் அவல நிலையை பொது மக்களிடம் எடுத்துக் கூறி வருகிற 2024ம் ஆண்டு மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று பேசினார்கள். இதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஷாஜகான், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் செய்யது இப்ராஹிம், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சேக் முகமது, கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநகர் மாவட்ட பொருளாளர் மிக்கேல், மாநகர துணைத் தலைவர் அபுதாஹீர், சிறுபான்மை நகர செயலாளர் முகம்மது பஷீர், மாநில பேச்சாளர் மஜீத், வடக்கு மண்டல தலைவர் சேகர், கோபால், பிரபாகரன், நகரச் செயலாளர் ஜெபராஜ், ஜெயராஜ், ஆரோக்கியம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

