தூத்துக்குடி
தமிழக அரசின் சார்பில் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் நினைவு நாளையொட்டி வஉசி மார்க்கெட் முன்புள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைசெயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், தாசில்தார் பிரபாகர், மாநகராட்சி மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கவிதாதேவி, வக்கீல் குபேர் இளம்பரிதி, மரியதாஸ், மாவட்ட அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர்கள் மேகநாதன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ், ரவி, குமாரன், கருப்பாசமி, ராமசந்திரன், சங்கரநாரயணன், தொழிற்சங்க மண்டலத்தலைவர் முருகன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், சிறுபான்மை அணி தலைவர் செய்யதுகாசிம், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கீதாசெல்வமாரியப்பன், பொன்ராஜ், சுப்பையா, கருப்பசாமி, பாலகுருசாமி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், இசக்கிராஜா, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், கந்தசாமி, ஜான்சிராணி, ரெக்ஸின், மரியகீதா, மகேஸ்வரி, கனகராஜ், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, மகளிர் அணி ரேவதி, சந்தனமாரி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், மற்றும் கருணா, மணி, பிரபாகர், அல்பட், வேல்பாண்டி, மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

