தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாசுஇல்லாத மாநகராட்சியை உருவாக்கி பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்கரை பகுதியையும் பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் கடற்கரை பகுதியில் மாஸ் கிளினிங் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக சாயர்புரம் போப் கல்லூரி தன்னார்வ அமைப்பின் சார்பில் முத்துநகர் கடற்கரையில் தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 1000 பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர் தினேஷ்குமார், நகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, கல்லூரி தாளாளர் நீகர் பிரின்ஸ்கிப்சன் வழிகாட்டுதலின்படி கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர்செல்வகுமார், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் சுகந்தா, வசந்தி, ஸ்டன்லி டேவிட் கோயில்பிச்சை, சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ஜெபத்தங்கம் பிரேமா, பொருளாதார துறை பேராசிரியர் தனசீலி, மற்றும் சாந்தி, கவுன்சிலர்கள் எடின்டா, கீதாமுருகேசன், சுரேஷ்குமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மீனவரணி அமைப்பாளர் டேனி, உள்பட கல்லூரி மாணவிகள் தூய்மை பணியாளர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வடக்கு மண்டலத்திற்குபட்ட திரேஸ்புரம் பிரதான சாலை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அரக்கிவிடுதல், கால்வாய் தூய்மை பணி, ஆகியவற்றையும் மேற்கொண்டார். தொடர்ந்து மற்ற மண்டலத்திற்குபட்ட வார்டு பகுதிகளிலும் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே தூய்மை பணியை முழுமையாக மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு பகுதியிலிருந்து கடற்கரையில் வந்து இணையும் கழிவு நீர் கால்வாய்கள் மூலம் சில தேவையற்ற கழிவு பொருட்கள் நெகிழிகள் வந்து சேருகின்றன. இதனால் கடலுக்குள் செல்லும் கழிவு பொருட்களால் மீன் இனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி மீனவர்களுக்கும் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் போக்கும் விதமாக இந்த மாஸ் கிளினிங் பணி கடற்கரை பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது
இந்த கழிவுகளை தருவைகுளம் குப்பை கிடங்கு பகுதிக்கு எடுத்துச்சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தூய்மையாக மாநகராட்சியை உருவாக்குவது போல தூய்மையான கடற்கரையும் அதன் பகுதியும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த மாஸ்கிளினிங் பணியில் மாநகராட்சி பகுதியில் ஈடுபட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்ற கழிவு பொருட்கள் வராத வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

