தூத்துக்குடி
பழமை வாய்ந்த சிவன் கோவில், பெருமாள் கோவில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்திலுள்ள அறிநிலைதுறைக்கு சொந்தமான திருக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் படிப்படியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன்கோவிலான ஸ்ரீபாகம்பியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமனம் செய்து இந்துசமய அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கோட்டுராஜா, கந்தசாமி, மற்றும் ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி ஆகியோர் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலுக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் மந்திரமூர்த்தி, ஜெயபால், முருகேஸ்வரி, பாலசங்கர் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்;ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், மற்றும் அர்ச்சகர்கள் சண்முகசுந்தரம், சங்கர், திமுக வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

