தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்யாநகர், பெரியசாமிநகர், ராஜபாண்டி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், இந்த பகுதிக்கு திமுக ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை கால்வாய், வசதிகள் அமைத்து தரப்படும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது புதிதாக புதிய குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முறையாக இணைப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், மாவட்;ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் மூக்கையா, அவைத்தலைவர் பெரியசாமி, பொருளாளர் வெங்கடாசலம், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் முத்துபாண்டி, செல்வராஜ், மரியதாஸ், பகுதி சபா உறுப்பினர் சாந்தி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

