• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்.. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!

policeseithitv by policeseithitv
September 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்.. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

செப்,5

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.

 

வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்குபதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 1908ம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடியில்

பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும் வ.உ.சி. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோ மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப்,

மாமன்ற உறுப்பினர்கள் பால குருசாமி சுரேஷ் குமார், ராமகிருஷ்ணன்,

உட்பட ஏராளமான மாமன்ற உறுப்பினர்கள்

மண்டல தலைவர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில்     எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.

Next Post

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை..!!

Next Post
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்.. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை..!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In