தூத்துக்குடி, செப்,5
தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சித.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி 152வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் பெருந்திரளாக பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி,ஆர் , காமராஜர், குரூஸ்பர்னாந்து, அண்ணா, காந்தி, ஆகிய சிலைகளுக்கும் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்.

இந்த
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம், கோமதி மணிகண்டன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், வட்டச்செயலாளர்கள் ராஜா, அருண்குமார், துரைசிங், சகாயராஜ், ஜெனோபர், அந்தோணிராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கோட்டாளமுத்து, சங்கர், பாபநாசம், ஹெய்னஸ், சீனிவாசன், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் டெரன்ஸ், மண்டல முன்னாள் இணைச்செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட மீனரவணி இணைச்செயலாளர் துரைபாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி முருகேசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், பேச்சியப்பன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகர் மற்றும் மனோகர் மூக்கையா, அந்தோனிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், வெங்கடாச்சலம், பொன்ராஜ், ஆறுமுகநயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பிச்சையா, காசி, முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

