தூத்துக்குடி
உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு பெற்ற வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.
இந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டி 19.07.2023 முதல் 22.07.2023 வரை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்-ல் வைத்து நடைபெற்றது. இதில் 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான 144 செ.மீ உயரப் பிரிவில் காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மகிஷா பிரியங்கா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று, இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
28.08.2023 முதல் 01.09.2023 வரை ஐரோப்பா கண்டம் சரோஜ்வா, போஸ்னிகா எனும் இடத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் 05.09.2023 முதல் 08.09.2023 வரை லெபனான் எனும் இடத்தில் நடைபெற உள்ள 5வது ஆசிய அளவிலான டேக்வோண்டா போட்டியிலும் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி சார்பாக உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற வீராங்கனை மகிஷா பிரியங்கா-வை கலெக்டர் செந்தில்ராஜ் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், பயிற்சியாளர் இராமலிங்க பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

