தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கி அனைத்து தரப்பினரும் வாழ்ந்து வரக்கூடிய ஊராட்;சியாகும். பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தரவேண்டும் என்று ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் ஆலயத்திற்கு சென்று வேண்டுதல் வைப்பது வழக்கமான ஒன்று நிறைவேறிய பின் நன்றி கடன் செலுத்துவது தமிழர்களின் பண்பாடு அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எல்லா இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்கள் வழிநடத்தும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது மரபாக இருந்து வருகிறது. அதன்படி கணபதி நகர் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் தொடங்கி அர்ச்சகர்கள் புனிதநீர் எடுத்து ஹோமம் நடத்தி கோபுரகலசத்தில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.
விழாவில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் மகாராஜா, கௌதம், உள்பட பக்தர்கள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

