இராமநாதபுரம், ஆகஸ்ட்,15
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், எஸ்.பி.பட்டணம் ஊராட்சி அலுவலகம்
மற்றும் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக அயலக அணி இராதநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளரும், எஸ்.பி.பட்டணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எம்.சகுபர் சாதிக் எஸ்பி பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி தொடக்கப்பள்ளியில்
தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு
இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
எஸ்.பி.பட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்திற்கு எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் சுலைஹாபீவி சகுபர் சாதிக் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு திமுக அயலக அணி இராதநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளரும், எஸ்.பி.பட்டணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எம்.சகுபர் சாதிக் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், இதர பொருட்கள் குறித்து விவாதித்தனர்.

இதில், பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், பங்கேற்றனர். எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர், உள்பட ஏராளமான பொதுமக்கள் இந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

