தூத்துக்குடி
அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி, அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.
அதனை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக மாநாடு லச்சனையை கார், பஸ் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, மற்றும் டூவிலர், செல் போன்களில் ஒட்டும் பணியை முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் துவக்கி வைத்தார்.
தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், வட்ட செயலாளர்கள் அருண்குமார், ராஜா, துரைசிங், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன், தூத்துக்குடி அனல்மின் நிலைய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாச்சாமி மற்றும் சுருளிசாமி, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், சிறுபாண்மை பிரிவு அசன், பேச்சாளர் அனல் ராஜசேகர், வட்ட துணைச் செயலாளர் ஐய்யப்பன், வட்ட பிரதிநிதிகள் மகாராஜன், ஜோதிகாமாரி, நயினார், அபிதாஹீர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் வரிசை கட்டி ஆர்வத்துடன் மாநாட்டு பேனர் மற்றும் ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றனர்.

