தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.க.மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில்
“மாஸ்” காட்டிய கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார்…
திமுக முக்கிய நிர்வாகிகள் பாராட்டினர்…
தூத்துக்குடி, ஜூலை,25
மணிப்பூர் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி
தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்துமிடம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள், மகளிர் அணியினர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், தூத்துக்குடியில் திமுக மாநாடாக காட்சி அளித்தது,
நேற்று நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெருந்திரளான திமுக மகளிர் அணியினர் வந்துள்ள நிலையில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய
திமுக செயலாளர் சரவணகுமார் தலைமையில் எழுச்சிமிகு கூட்டம் மாப்பிள்ளை யூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஒன்றிய மகளிர் அணியைச் சார்ந்த நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள்,
மகளிர் தொண்டரணி, ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ,ஆர்ப்பாட்டத்திற்கு வந்த இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து கண்டன விளம்பர பாதைகள், மற்றும் திமுக கொடியுடன் கூட்டம் கூட்டமாக வந்தது குறிப்பிடத்தக்கது . இதற்கான ஏற்பாடுகளை
கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் முன்னின்று நடத்தினார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதி அதிமுகவின் இரும்பு கோட்டையாக ஒரு காலகட்டத்தில் இருந்து வந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சர்ருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் சிறப்பாக செயல்பட்டு
வரும்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும்,
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார்
திமுக தொண்டர்கள் மற்றும் கிளை கழகத்தை சார்ந்தவர்கள் அனைவரையும் முறையாக வழிநடத்தி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட
மாப்பிள்ளை யூரணி பகுதியை திமுக கோட்டையாக மாற்றி காட்டி வருகிறார். கிழக்கு ஒன்றிய பகுதியில் திமுக தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து
சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் சரவணகுமார் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட
மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் தனக்கூறி அதே பாணியில் சுறுசுறுப்புடனும் எழுச்சிமிகு பணியினாலும்
மாப்பிள்ளை யூரணி பகுதியிலிருந்து
பெருந்திரளான மகளிர் அணியினர், மற்றும் திமுக தொண்டர்களோடு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று” மாஸ்” காட்டினார்.


தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றிய பகுதியில் இருந்து மகளிர் அணி நிர்வாகிகள், திமுக தொண்டர்களை அரவணைத்து ஆர்ப்பாட்டத்தில்
பெருந்திரளாக பங்கேற்றுதற்கு
கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூர ணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமாரை திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்..
செய்தி தொகுப்பு:
எம்.கண்ணன் போலீஸ் செய்தி நியூஸ்..

