தூத்துக்குடி ஜூலை, 23
தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் தூத்துக்குடியில்
பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு முன்பு திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கராஜ், ஒன்றிய பொதுச் செயலாளர் கரிகாலன், கன்னியாகுமாரி பெரும் கோட்ட
மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் அரிராம் ஆச்சாரியார், பொறுப்பாளர்,
ஓ பி சி அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஆர். சரவணகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள் லட்சுமண விக்னேஷ் ,
மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி கிருஷ்ணவேணி, அனு மாரியப்பன், முருக லட்சுமி, ஒன்றிய துணை பொதுச்செயலாளர்கள் மாரிமுத்து, பொருளாளர் தினகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் மாரிச் செல்வம் முருகன், திருமணிகுமார், முருகேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு மாவட்டச் செயலாளர் சக்திவேல்ராஜ், ஒன்றிய துணைத் தலைவர் சங்கர பேரி வடக்கு
கே சக்திவேல்
ஒபிசி, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் விக்னேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
ஏஎன்எஸ் மாரியப்பன், கே ஜி பாலகிருஷ்ணன், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர், அதுபோல் தூத்துக்குடி தாளமுத்து நகர் மெயின் ரோட்டிலும் பாஜக சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து
டூவிபுரம் மெயின் ரோட்டில் பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 39 ஆவது வார்டு கிளைத்தலைவர் உஷா தேவி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பழைய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். முத்தையாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமை தாங்கினார். மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தி தொகுப்பு கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ்

