தூத்துக்குடி, ஜூலை, 23
தூத்துக்குடியில் DYFI இரத்ததான கழகமும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தினர். இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்று இரத்ததான மருத்துவ முகாமை
மேயர் ஜெகன் பெரியசாமி
துவக்கி வைத்தார். தூத்துக்குடி
புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முகாமை துவக்கி வைத்து ரத்த
கொடை யாளிகளான, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை
வெகுவாக பாராட்டினார்..
இந்நிகழ்ச்சியில்DYFI மாவட்ட செயலாளர் சுரேஷ், தலைமை வகித்தார், தூத்துக்குடி மாநகர தலைவர் ஜேம்ஸ், தூத்துக்குடி புறநகர் தலைவர் ஜான்சன், தூத்துக்குடி ஒன்றி துணை செயலாளர் ஜெகதீஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் ஆண்டனி, மாமன்ற உறுப்பினர்கள், சீனிவாசன் என்ற ஜான், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான கந்தசாமி,
33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன் எஸ் எஃப் ஐ மாவட்ட செயலாளர் கார்த்திக் உட்பட ஏராளமான பங்கேற்றனர்.
இந்த முகாமை துவக்கி வைத்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது
மனித ரத்தத்துக்கு மாற்று எதுவுமில்லை. உடலில் ஓடும் உயிர்த்திரவம் ரத்தம். மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். கொடையாளி அளிக்கும் ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர். மனித உயிர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த மனிதநேயமிக்க
செயல் மூலம் இரத்ததானம் செய்யும் இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன் என மேயர் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ்

