• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு முதலமைச்சருக்கு கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

policeseithitv by policeseithitv
July 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து தெரிவித்ததாவது:

வாழ்க்கையில். மிகவும் இனிமையான பருவம் கல்லூரி பருவம். கல்லூரி காலத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். மேலும், சிந்திக்க கற்றுக்கொள்வதுடன் இந்த வயதில் முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமையும். தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ளலாம். கல்லூரிக்காலம் உங்களை பட்டை தீட்டிக்கொள்ளும் காலமாகும். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழிலதிபராவதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான திட்டம் தான் நான் முதல்வன் திட்டமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களை நிறுவியுள்ளார்கள். நமது மாவட்டத்தில் தூத்துக்குடி, நாகலாபுரம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் படித்து முடித்தவுடன் டாடா நிறுவனம் நேரடியாக வேலைவாய்ப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால தலைவர்களாகிய தமிழ் சமுதாயமாகிய உங்களை பெருமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று அறிவித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். கல்விச்செல்வத்தை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. மாணவ, மாணவிகள் மனது வைத்தால் சாதிக்கக்கூடிய வயது இதுவாகும். கல்லூரி புத்தகங்கள் தவிர உலக அளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல. நீங்கள் அறிவாற்றலை பெற்று சிந்தனை மிக்கவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, தைரியமுள்ளவர்களாக இருந்தால் வாழ்க்கை எளிதாகும். வானம் வசப்படும். உங்களால் எல்லா வகையிலும் முன்னேற முடியும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

 

முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நான் முதல்வன் – உயர்வுக்குப்படி ஸ்பாட் அட்மிஷன் பெற்றதற்கான ஆணை 10 பேருக்கும், கல்விக்கடன் பெறுவதற்கான ஆணை 14 பேருக்கும், சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றை வழங்கினார். மேலும், புதுமைப்பெண் – திட்ட விளக்க கையேடுகள் 10 பேருக்கு மற்றும் நான் முதல்வன் – உயர்வுக்குப்படி புத்தகங்கள் 10 பேருக்கும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, பயிற்சி கலெக்டர் பிரபு, சமூகநல அலுவலர் ரதிதேவி, தாசில்தார் பிரபாகர், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மண்டலத்;தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை அமைப்பாளர் பால்ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துபாண்டி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பவாணி மார்ஷல், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, வட்டச்செயலாளர் முத்துராஜா, மகளிர் அணி ரேவதி, சந்தனமாரி, சத்யா, உமாமகேஸ்வரி, மற்றும் கருணா, மணி, பிரபாகர், அல்பட், மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு நன்றியுரையாற்றினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தை இரவு முற்றுகையிட்ட பொதுமக்கள் : மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் , போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்!!! தூத்துக்குடியில் பரபரப்பு!!

Next Post
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தை இரவு  முற்றுகையிட்ட பொதுமக்கள் : மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் , போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால்  கைவிடப்பட்ட போராட்டம்!!!  தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தை இரவு முற்றுகையிட்ட பொதுமக்கள் : மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் , போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்!!! தூத்துக்குடியில் பரபரப்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In