தூத்துக்குடி, ஜூலை,16
தமிழகம் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெ ஜெ நகர் கிங் மேக்கர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் டேவிஸ்புரம் முதல் தருவைகுளம் சாலையில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார். பூஞ்சிட்டு மாட்டுவண்டி 5 மைல் தூரம், தேன்சிட்டு மாட்டுவண்டி 4 மைல் தூரம், போட்டி நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்ற பூஞ்சிட்டு அணிக்கு முதல்பரிசு ரூ15121, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், இரண்டாம் பரிசு ரூ13121 தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக துணைச்செயலாளர் கணேசன், 3ம் பரிசு ரூ11121 சுதாகர், 4ம் பரிசு ரூ 4121 தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆகியோர் பரிசு தொகையை வழங்கினார்கள்.
தேன்சிட்டு அணிக்கு முதல்பரிசு ரூ 10121 மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், இரண்டாம் பரிசு ரூ 8121 தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பாணிமுத்து தேவர், 3ம் பரிசு ரூ 6121 ராஜா, 4ம் பரிசு 4121 ராயல் தினேஷ், காமராஜர் நினைவு கோப்பையை தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், ஆகியோர் வழங்கினார்கள்.


விழாவில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன், தொழிலதிபர்கள் குமார்ஜீ, ராஜா, அந்தோணி விமல்நாடார், ஆ.சண்முகபுரம் இளைஞர் அணி தலைவர் பாஸ்கர் நாடார், பொன்ராஜ் தேவர், திமுக மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜீவா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய திமுக பொருளாளர் மாரியப்பன், திமுக கிளைச்செயலாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், ஆனந்த், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல் ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சுந்தர் செய்திருந்தார்.

