தூத்துக்குடி, ஜூலை,16
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளியில் கடந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா மாப்பிள்ளையூரணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊர் தலைவர் பெத்து பாலமுருகன் தலைமை வகித்தார்.
ஊர் தர்மகர்த்தா சுந்தரபாண்டி, ஊர்அம்பலம் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செண்பகராஜ் வரவேற்புரையாற்றினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் குத்துவிளக்கேற்றி கடந்த ஆண்டு நடைபெற்ற 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கி நினைவு பரிசும் வழங்கினார்.
விழாவில் துணை அம்பலம் சுப்பிரமணி, துணை தர்மகர்த்தா மணி, துணை செயலாளர் பெரியசெல்வம், பொருளாளர் மேகநாதன், பள்ளி ஆசிரியர்கள் சேர்மகணி, சிவசங்கரி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் காமராஜர் வாழ்க்கை வரலாறு பேச்சுப்போட்டி பாடல்கள் நடைபெற்றன.
மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராணி நன்றியுரையாற்றினார்.

