நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டடரங்கில் மகளிர் திட்டம் சார்பில் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல் பெற வாழ்வாதார உதவி அழைப்பு எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டார்.
நாகப்பட்டினம் ஜூலை 10
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டடரங்கில் மகளிர் திட்டம் சார்பில் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல் பெற வாழ்வாதார உதவி அழைப்பு எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுக்கும் நடைபெற்ற கூட்டத்தில் மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள் நலத்திட்டங்கள், நிதியுதவிகள் மற்றும் ஊரக, நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல்கள் பெற வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155-330 காட்சிப்படுத்திட வெளியிடப்பட்டது. மேலும், மாநில அலுவலக வழிகாட்டுதலின் படி வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மையம், நியாய விலை கடை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

