நாகப்பட்டினம் ஜூலை 10
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் வட்டம் நித்தியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,150 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிளையும்வேதாரண்யம் வட்டம் வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நாகரெத்தினம் மற்றும் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,459 என மொத்தம் ரூ. 26,918 மதிப்பீட்டிலான கைப்பேசியினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் நகராட்சிப்பகுதியில் உள்ள மிகவும் பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயத்தினை புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முதல் தவணையாக ரூ.4,50,000 க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தோட்டக்கலைத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த தக்காளி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அ.சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும்அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

