நாகப்பட்டினம் ஜூலை 6
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் நுண் தொழில் நிறுவன நிதி திட்ட துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவங்கி வைத்து நுண் தொழில் நிறுவன நிதிக்கான கடனுதவிகளை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் உடன் உள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் நுண் தொழில் நிறுவன நிதி திட்டத் துவக்க விழா நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது நம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டாரங்களில் 29 ஊராட்சிகளிலும், தலைஞாயிறு வட்டாரங்களில் 24 ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரகத் தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கம் ஆகும்.இதனடிப்படையில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற நுண் தொழில் நிறுவன நிதி திட்டத் துவக்க விழாவில் முதல் கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஊராட்சிகளுக்கு நுண்தொழில் நிறுவன நிதியாக 35 பயனாளிகளுக்கு ரூ. 17,25,000 மதிப்பீட்டிலும், சமுதாய பண்ணை பள்ளி மூலமாக 95 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 மதிப்பீட்டிலும், சமுதாயத் திறன் பள்ளி மூலமாக 150 பயனாளிகளுக்கு ரூ.4,32,000 மற்றும் இணை மாநிலத் திட்டத்தின் மூலமாக 4 பயனாளிகளுக்கு ரூ. 12,76,560 மதிப்பீட்டில் என ஆக மொத்தம் ரூ. 38,83,560 மதிப்பீட்டில் நிதிக்கான கடனுதவிக்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஆர்.வேல்முருகன் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் தாரிக் செய்யது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

