தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் மின்சாரம் முறைப்படுத்தி வழங்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றம் சார்பில் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் ஊராட்சி அய்யனார் காலனியில் 63கேவி உற்பத்தி திறன் கொண்ட புதிய மின் மாற்றியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், கூட்டுடன் காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், ஜோசப் மோகன், திமுக கிளைச்செயலாளர்கள் ராமசாமி, இசக்கி, சீனிவாசகம், மாணவரணி உதயகுமார், காங்கிரஸ் பிரமுகர் கோபால், மற்றும் ராஜ், கப்பிக்குளம் பாபு, மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

