தூத்துக்குடி.
தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் இருந்த அருள்மிகு ஸ்ரீவரத விநாயகர் திருக்கோயில் ரெட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோவில் தெரு பகுதியில் புதிதாக ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் கட்டபட்டு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைக்குப் பின்பு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், கவுன்சிலர் ராமுத்தம்மாள், முன்னாள் கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமபந்தி அன்னதான விருந்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, மேயர் ஜெகன் பெரியசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

