தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழா கடந்த 27ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 4வதுநாள் நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா தலைமை வகித்தார். சாமி தரிசனம் செய்த பின்னர்
சங்கரன்கோவில் பிரியசக்தி குழுவினரின் பக்தி தெம்மாங்கு கும்மிபாடல்கள் இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்து மகளிர் அணியினருக்கு பரிசுகள் வழங்கி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில் ஆண்டு தோறும் இந்த கோவில் கொடைவிழாவிற்கு எனது தந்தை வருவதுண்டு அவரது மறைவிற்கு பின் தொடர்ந்து இந்த கோவிலுக்கு அவரது வழியில் நான்வருகிறேன். இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைத்து வாழ்க்கையில் நலமுடன் வாழ வேண்டுகிறேன். பொதுவாழ்க்கையில் ஈடுபடுபட்டு பல பணிகள் செய்வதை தர்மகர்த்தா சுட்டி காட்டினார். தாமோதரநகர் பிரதான மெயின்சாலை அமைத்ததற்கும் ஹோலிகிராஸ் பள்ளி அருகில் மக்கள் நலன் கருதி வேகத்தடை அமைத்து கொடுத்ததையும் சுட்டி காட்டினார்கள் எங்களை போன்றவர்களுக்கு மக்கள் பணி செய்து அவர்களது என்னங்களை பூர்த்தி செய்வதில் தான் எங்களுக்கும் ஒருவகையில் மகிழ்ச்சி கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஆன்மீக பகுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளீர்கள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் ஆன்மீக பனியை செய்ய வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஞானராஜ், பொருளாளர் பழனிக்குமார், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பொன்ராஜ், பிரபு, துணைச்செயலாளர்கள் செல்வராஜ், முருகேசன், கனகமாரியப்பன், மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், திமுக வட்டச்செயலாளர் மாரிசெல்வ ஈஸ்வரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன், மற்றும் ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

