தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 6வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் பேசுகையில் இந்த பகுதிக்கு திமுக ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தபகுதியில் குறைகேட்க வந்தபோது நீங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படைகளில் இந்த பகுதிக்கு நகர்புற ஆரம்பசுகாதார நிலையம், அலங்காரதட்டு பகுதியில் அங்கன்வாடி மையம், மற்றும் தார்சாலை, கோயில்பிள்ளைவிளையில் அங்கன்வாடி மையம், புதிய தார்சாலை, வசதி செய்யப்பட்டு குடிதண்ணீர் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு சீரான குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் அனைத்து பகுதிகளுக்கும் அமைக்கப்படாமல் உள்ள சாலைகள் முழுமையாக அமைத்து கொடுக்கப்படும், மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.

மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச்செயலாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

