விளாத்திகுளம் உட்கோட்டம் எப்போதும்வேன்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் இருக்கும் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் வருகிற 11.03.2021 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு சுமார் 5000 பக்தர்கள் வருகையை முன்னிட்டு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆதனூரில் இருக்கும் 2 கோவில்களிலும் இன்று ஆய்வு செய்தார்கள்.

எப்போதும்வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துமாலை, காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
சிறப்பு செய்தியாளர் தூத்துக்குடி ஆத்தி முத்து

