தூத்துக்குடி.
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழியான, ‘இந்திய குடிமகனாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். பொதுஇடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்,’ என்று மேயர் உறுதி மொழியை வாசிக்க அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரங்கநாதன், ராமச்சந்திரன், அதிகாரிகள் காந்திமதி, ராஜபாண்டி, ராஜசேகர், ஹரிகணேஷ், ஸ்டாலின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி.
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழியான, ‘இந்திய குடிமகனாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். பொதுஇடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்,’ என்று மேயர் உறுதி மொழியை வாசிக்க அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரங்கநாதன், ராமச்சந்திரன், அதிகாரிகள் காந்திமதி, ராஜபாண்டி, ராஜசேகர், ஹரிகணேஷ், ஸ்டாலின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

